குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை.
சிவா தன் கையில் இருந்த இரண்டு துருப்புச் சீட்டுக்களையும் பார்த்துக் குழம்பிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில் விஷ்ணுவின் அழைப்பு வரவும், தன் தலைமுடியைக் கோதிவிட்ட இடக்கையால் போனைப் பார்த்தான். அதில் தன் பிம்பம் காட்டும் ஸ்க்ரீனை வெறித்தபடி, மீண்டும் குழப்பத்தில் ஆள்ந்தான்...
இதற்குள், இந்தக் கதைக்கு சம்பந்தமான ஆளுங்களைப் பார்த்திடுவோம்.
விஷ்ணு- இவன் ஒரு கல்லூரிப் பையன். மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படிப்பதாக ஞாபகம். சிவா ரூட் விடும் பெண்ணின் பக்கத்து வீடு என்பதால், இவனை கடந்த இரண்டு வருடங்களாகக் சிவாவுக்குத் தெரியும்.
எஸ்.பி. கோகுல்- சூலூர் சமஸ்தானத்திலே பழனிச்சாமி- உமா ஆகியோரின் ஒரே மகன். பெரிய அரசியல்வாதி. ஆங், இவர்தான் சிவா ரூட் விடும் பிகரின் அப்பா.
கீதா- இவள்.... இவள்..... சிவாவின் கனவுக் கண்ணி. எஸ்.பி.கோகுலின் உயரத்தையும், பேரழைகையும் கொண்டிருந்தாள். கொஞ்சம் மாநிறம். எனினும், சிவாவுக்கு அவளைப் பிடித்தே இருந்தது.
“வருத்தமற்ற நொடிகள்
ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,
உன் செவ்விதழ் சிந்தும்
முத்தத்திற்காய்!”
என்றெல்லாம் அவனைக் கவிதை எழுத வைத்த வித்தைக்காரி.
இப்போ, சிவாவின் குழப்பத்துக்குக் காரணம் தேடிப் போவோமா?
பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பே, சிவா தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தான். அவளும் சம்மதிக்கவே, நிதமும் அவளுடன் கடலை போட்டுவந்தான். சிவாவுக்கு ஏழரை உச்சத்தில் இருந்த நேரம், அவளின் பிறந்தநாள் வந்தது. அவனும் அவளுக்கு ஒரு செல் போன் வாங்கி பிரசண்ட் பண்ணினான்.
அதுல வந்தது வினை. பிறந்தநாளுக்கு அடுத்த ரெண்டு நாள், புது போனுல கடலை போச்சு. இப்போ, அந்த போனு அவிங்க அப்பன் கையுல. பொறவுதான் அவிங்க அப்பன் கூப்பிட்டான் சிவாவை. போச்சு, தெரிஞ்சு போச்சு. அதனால குடும்பத்தோட போயிப் பொண்ணுக் கேட்கப் போயிட்டான் சிவா.
ஒரு வழியா கண்ணாலத்துக்கு ஏற்பாடும் ஆயிடுச்சு. பொறவு? அரசியல்வாதியின் மக ஆச்சே. ஓடிப்போயிக் கண்ணாலம் பண்ணுனா கேவலம்னு, அரேஞ்சுடு மேரேஜூக்கு சம்மதம் சொல்லிட்டாரு.
இப்புடியான நெலைமைலதான், விஷ்ணு இப்புடி ரெண்டு துருப்புச்சீட்ட தயாரிச்சு இருக்கான். அவன் பர்சு, சிவாவோட பேக்ல வச்சிருந்ததாலையும், அடுத்தவன் பர்சனல நோண்டுற புத்தி இருந்ததாலையும், இந்த ரெண்டு சீட்டும் கெடச்சுது சிவாவுக்கு.
மீண்டும் விஷ்ணுவின் கால். இரு விஷ்ணுவையே கேப்போம்னு அட்டெண்ட் பண்ணினான் சிவா. “ஹலோ” என்ற சம்பிரதாயமான வார்த்தையை உதிர்த்தான் சிவா.
இணைப்பு உடனே துண்டிக்கப்பட்டது.
சிவா, மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
“S W H2 6F- என்பது முறையே Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F) என்பதையும், மற்றொரு சீட்டு, சிவாவின் பரம எதிரி தினகருக்கு (சிவாவின் ஆளை கண்ணாலம் பண்ண முன்பு ஒரு காலத்தில் ரூட் போட்டவன்) என்பதையும் சிவா கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை.
கதை முடிவு இது தான். சிவா எப்படி என விஷ்ணுவிடம் கேட்க, அவன் பிறகு சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு, தினகருடன் சேர்ந்து கண்ணாலத்தை நிறுத்த பிளான் பண்ணி இருந்தான்(அவனுக்கு என்ன பொறாமையோ?). அதனால், சிவா ஒரு குடிகாரன் என்ற பொய்யைக் கொண்ட ஒரு குறிப்பால் உணர்த்த விரும்பினான் விஷ்ணு. மற்றொரு சீட்டை, தினகருக்கும் அனுப்ப எத்தனித்தான் போலும். பாவம், அவர்களின் திட்டம். இப்போது அந்தச் சீட்டுகள் சிவாவைக் குழப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.
சிவா-கீதா திருமணம் இனிதே முடிவுற வாழ்த்துக்களுடன்,
-வெளங்காதவன்.