இணைப்பில்

Sunday, November 4, 2012

வருங்கால அமெரிக்க ஜனாதிபதிக்கு!



அம்மையீர்!

வணக்கம்.
தங்கள் நலம் உலகறிந்ததே. ஆனால், நானும் எம்மனோரும் சுகமாய் இல்லை.

காரணம் தாங்கள் அறிந்ததே.

பொய்த்துப் போன மழையாவது, மனசு வைத்து அப்பப்போ பெய்யுது. ஆனா, மறந்துப் போன உம்ம மனசு?

அமைச்சர்கள அடிமையாக்குறது, அதிகாரிகள தொரத்தி அடிப்பது, தி.மு.க.காரன ஜெயில்ல போடுறது, இணையத்துல எந்த அப்புராணி சப்புராணி உம்மப்பத்தி எழுதுனா, பொய் கேசு போடுறது; இதைப் பத்தியெல்லாம் சிந்திச்சிக்கிட்டு இருக்கீயன்னு நம்ம சின்ராசு சொன்னான்...

ஏதோ எப்புடியோ போயித் தொலையட்டும், நமக்கென்ன’ன்னு இருக்க முடியலை. வோட்டுப் போட்டுத் தொலஞ்சுட்டமேன்னு வவுரெல்லாம் எரியுது. ஆங், கேக்க மறந்துட்டேன். சசிகலாவின் நலத்தை விசாரித்ததாக சொல்லவும்.

அப்புறம், மேட்டருக்கு வாரேன்.

இந்தக் கரண்டு கரண்டுன்னு ஒண்ணு மேடம்ம்ம்ம்ம். என்னடா, அதைக் கண்டுபுடிச்சமேரி ரெண்டுவாட்டி சொல்றியேன்னு கேக்காதீக. ‘மைக்கேல் பாரடே’ன்னு ஒரு பன்னாட கண்டுபுடிச்சுட்டுப் போயிச்சேந்துட்டான். இப்போ அவன் போயிச் சேந்தது மேட்டர் இல்ல அம்மையீர். இப்போ இருக்குற கரண்டு கட்டு கண்டினியு ஆச்சு, அப்புறம் சோத்துக்கு ஊ ஊ ஊ ஊ ஊ.

எப்பிடியா? விவசாயம் பண்ண தண்ணி மட்டும் பத்தாது, அதை இறைக்க கரண்டும் வேணும்வோய். நம்பலைன்னா, நம்ம அண்ணாச்சி ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்கவும்.

இன்னொண்ணு இன்னான்னா, லங்கை லங்கைன்னு ஒரு நாடு இருக்குங்க(மேலதிக தகவலுக்கு எங்க ஊரு எம்.எல்.ஏ.வை அணுகவும்). கஞ்சி தண்ணிக்காக அவிங்க பாவம் மீன் புடிக்கப் போறாங்க. சில ராஸ்கோல்ஸ் அவிங்கள அடிச்சு அடிச்சு வெறட்டுராங்கலாம். இதெல்லாம் ஏன் என்னோட பார்வைக்குக் கொண்டுவரலைன்னு உங்க அடிமைகள ஒரு ரைட் விடுங்க மேடம்.

ஆனா, தில்லா ஒவ்வொரு படகுலையும் துப்பாக்கியோட ஒரு போலீச அனுப்பிப்பாருங்க. அப்பிடியில்லாம, “மீனவன் மீனைக் கொல்லுரான்”ற ரேஞ்சுல நம்ம பாடகிமேரி ஸ்டேட்மெண்டு வுட வேண்டாம். மேடம், அதுவும் உங்க கேசுல அடுத்து என்ன சொல்லி வாய்தா வாங்கலாம்னு யோசிச்சதுபோக நேரமிருந்தா இதைப் பற்றியும் ரோசிக்கவும்.

டெங்கு காய்ச்சல் இப்போ காட்டோ காட்டுன்னு, நம்ம டாக்குட்டார்மேரி காட்டுது. கால்ல விழுந்து கெஞ்சிக் கேக்குறேன், அதை சரி செய்ய எந்த நடவடிக்கை எடுக்காட்டியும் பரவாயில்ல, ஆனா, சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னாவது எங்களுக்குச் சொல்லவும்.

-வெட்கங்கெட்ட ஆட்சியர்கள் ஆளும் நாட்டில்,
மானங்கெட்ட குடிமகன்,
வெளங்காதவன்.

டிஸ்கி: யாராவதுக்கு மனம் புண்பட்டால், நல்ல டாக்டரிடம் காட்டவும். அப்பவும் ஆறவில்லையெனில் ஆசிட் வாங்கி ஊத்தவும். நன்னி.

13 comments:

Unknown said...

ரொம்ம நாளைக்கு அப்புறம்...! மாட்டை கிடையில போட்டுட்டாருய்யா எங்க சிங்கபட்டி சமீனு!

Unknown said...

சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னாவது எங்களுக்குச் சொல்லவும்.
//////////////////////////
வோய்..!லாடு மாதிரி பேசுறீர் எமக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டமா...?
மாடு மேக்கிற உமக்கு கால்நடை அமைச்சர் யாருன்னு தெரியுமா வோய்?

வெளங்காதவன்™ said...

//வோய்..!லாடு மாதிரி பேசுறீர் எமக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டமா...?
மாடு மேக்கிற உமக்கு கால்நடை அமைச்சர் யாருன்னு தெரியுமா வோய்?///

ஹி ஹி ஹி... தெரியாதுவோய்!!

முத்தரசு said...

//மானங்கெட்ட குடிமகன்,
வெளங்காதவன்.//

ஆமா ஆமா ஆம்லேட் போட்டதிலேயே தெரியுது

வெளங்காதவன்™ said...

// முத்தரசு said...

//மானங்கெட்ட குடிமகன்,
வெளங்காதவன்.//

ஆமா ஆமா ஆம்லேட் போட்டதிலேயே தெரியுது ///

ராசுகோல்... சீரியஸா பேசிட்டு இருக்கேன், சிரிப்புப் போலீஸ்னு சொல்றீரே!

வெளங்காதவன்™ said...

//Sakthi Dasan said...

நண்பரே,

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com

- தமிழ் களஞ்சியம்///

வெகு சந்தோசம்னே! கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. இனிமே தயவுபண்ணி இந்தப் பக்கம் வந்துராதீரும்... நன்னி

Robert said...

சிங்கத்தை அதோட குகையிலே சந்திக்கிறீரோ??? பார்த்துங்க ஏடாகூடமா ஆயிறப் போகுது!!இப்பல்லாம் அவதூறு,மான நஷ்ட வழக்கு போடுறதுதான் ரொம்ப பாப்புலர் ஆகுற வழின்னு நெறய பேரு கிளம்பி இருக்குறதா கேள்வி.... ஆசீர்வாதமெல்லாம் அள்ளி வழங்குறீரு இந்த பக்கமும் கொஞ்சம் அள்ளிவிடும்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நண்பரே,

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள எப்பவும்போல எழுதாமல் இருங்கள்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.. ஹிஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அமெரிக்கால நட்டும்.. கொட நாடு இருந்திருந்தா,, என்னைக்கோ சனாதிபதி ஆகியிருக்கும்..ஆங்...!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் சைபர்கிரைம் இதை பாக்கலியா? என்ன கொடும சார் இது?

நாய் நக்ஸ் said...

இப்ப கமெண்ட் போடணுமா?????????
என்ன போடுறது......???????

சரி.........

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........
:)))))))))))))))

ezhil said...

இன்றைய சூழலில் அவசியமான பதிவு. ப்திவில் போடுவதற்கு பதில் அப்படியே அம்மாவுக்கு போஸ்ட் பண்ணீங்கன்னா புண்ணியமாப் போகும்(தைரியமா பதிவை போட்டுட்டீங்க அப்படியே அனுப்பிடுங்க)

ezhil said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்