இணைப்பில்

Monday, September 19, 2011

ஐயோ குத்துதே! ஐய்யையோ குடையுதே!- பாகம் 2

முந்தைய பாகத்தைப் படிக்க இங்கே செல்லவும்....

முந்தைய காலங்களின் சமீபத்திய பொழுதுகளில் மலைவனத்தின் வனப்பும், வளங்களும் சொல்லிமாளாது...

மற்ற வன உயிர்களின் வளங்களை எடுத்தாட்கொண்டு தன் பரிவாரங்களை வளர்த்தெடுத்த இம்மலைவனத்தின் எச்சில் உணவுகளுக்காய், அதையும் பிரசாதமாய் எடுத்துண்ட வன உயிர்கள் எத்தனை எத்தனை?

தாம் உண்பது எச்சில் உணவு என்பதையும் மறந்த அவ்விலங்குகள், மலை வனத்தின் பெருமைகளை நிதமும் துதிபாடுவதைத் தமது கொள்கையாகவே கொண்டிருந்தன....

மலைவனமும், அத்துதிப்பாடல்களைக் கேளாமல் உறங்கியதில்லை...

அவ்வனமும் அவ்வுயிரனங்களைக் கட்டி ராஜ்யத்தில் கோலோச்சியதுதான்.......

வனத்தின் சுற்றங்களின் எண்ணிக்கை, மிக மிகப் பெரிது.....

வனத்தின் வாரிசுகளும் ராஜ்ஜியம் செய்யவே தயார் செய்யப்பட்டிருந்தனர்..

அவ்வாறான வனமும், அதன் சுற்றமும் நட்பும் வேட்டையனின் தாக்குதலுக்குட்பட்டதால், வெந்து நொந்துதான் போயிருக்க வேண்டும்....

நிதமும் ஒரு அறிக்கை என தொடர்ந்துகொண்டே இருக்கிறது.....

இந்நிலைக்குக் காரணத்தை நாம் அறியும் முன், கரடிகளுக்கும் இந்த வனத்திற்குமான தொடர்புகளை அறிந்துகொள்ள அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள்.....

30 comments:

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

காண்டோட காத்துகிட்டு இருக்கோம்..யோவ்..நீ செய் யா..நீ என்ன தான் சொல்றனு பார்க்குறோம்..

வெளங்காதவன்™ said...

///காண்டோட காத்துகிட்டு இருக்கோம்..யோவ்..நீ செய் யா..நீ என்ன தான் சொல்றனு பார்க்குறோம்.. ////

ஹி ஹி ஹி....

அதுக்காக அருவாவ எடுத்துடப்படாது...

பேச்சு பேச்சாதான் இருக்கணும்...

Unknown said...

அந்த அறிக்கைக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தமில்லை சாமியோவ்!

எஸ்.கே said...

சின்னதா இருக்கு பதிவு!

வெளங்காதவன்™ said...

///அந்த அறிக்கைக்கும் இந்த பதிவுக்கும் சம்மந்தமில்லை சாமியோவ்! ////

ஆமா ஆமா...

சொல்ல மறந்துட்டேன்....

வெளங்காதவன்™ said...

///எஸ்.கே said...

சின்னதா இருக்கு பதிவு!////

நேரம் கெடைக்கல எஸ்.கே....

இன்னும் ஆறேழு பாகம் இருக்கு...
வருத்தப்படாதீங்க.....

வைகை said...

பெரிய்ய்ய்ய்ய்ய வனமாவுல இருக்கு? உள்ள போனவன் உசுரோட திரும்புவானா? :))

வெளங்காதவன்™ said...

///வைகை said...

பெரிய்ய்ய்ய்ய்ய வனமாவுல இருக்கு? உள்ள போனவன் உசுரோட திரும்புவானா? :))
////

பொறுத்திருந்து பாப்பம்னே!

செல்வா said...

கரடிக்கும் இதுக்கும் தொடர்பா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

வெளங்காதவன்™ said...

///கோமாளி செல்வா said...

கரடிக்கும் இதுக்கும் தொடர்பா ?
////

ஆமாப்பு...

இன்னும் நெறைய சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கு....

வெளங்காதவன்™ said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
////

மே...மே மே.....

வாங்கண்ணே!

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு ஒன்னுமே புரியலையே ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

நான் இன்னும் அருவாளை எடுக்கவே இல்லை அதுக்குள்ளே அருவா சத்தம் கேக்குது.....

வெளங்காதவன்™ said...

///நான் இன்னும் அருவாளை எடுக்கவே இல்லை அதுக்குள்ளே அருவா சத்தம் கேக்குது....////

ஹி ஹி ஹி....
வேணாம்னா......
ஐயாம் பாவம்....

வெளங்காதவன்™ said...

///MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு ஒன்னுமே புரியலையே ஹி ஹி...//////

எழுதுன எனக்கே புர்ல....

பொறவு உங்களுக்கு எப்பூடி?

ஹி ஹி ஹி....

rajamelaiyur said...

//
அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள்.....//

இருக்கேன் வேற வழி

rajamelaiyur said...

நல்ல பதிவு

rajamelaiyur said...

tamilmanam 9 th vote

வெளங்காதவன்™ said...

வாங்க வாங்க ராஜா அண்ணே!

#எனக்கு வயசு பதினாலு...

சி.பி.செந்தில்குமார் said...

வெளங்காதவன் said...///MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு ஒன்னுமே புரியலையே ஹி ஹி...//////

எழுதுன எனக்கே புர்ல....

பொறவு உங்களுக்கு எப்பூடி?

ஹி ஹி ஹி..

>>>

வெளங்கிடும்..,

வெளங்காதவன்™ said...

///சி.பி.செந்தில்குமார் said...

வெளங்காதவன் said...///MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு ஒன்னுமே புரியலையே ஹி ஹி...//////

எழுதுன எனக்கே புர்ல....

பொறவு உங்களுக்கு எப்பூடி?

ஹி ஹி ஹி..

>>>

வெளங்கிடும்..,
////

ஹி ஹி ஹி...

சக்தி கல்வி மையம் said...

எதோ புரியிற மாதிரி இருக்கு.. ஆனா ஒன்னும் புரியல...

ங்கே.....ங்கே...

வெளங்காதவன்™ said...

///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எதோ புரியிற மாதிரி இருக்கு.. ஆனா ஒன்னும் புரியல...

ங்கே.....ங்கே...
///

விரைவில் வெளங்கும்...

#வருக வருக...

K said...

வணக்கம் நண்பா! உங்களோட 54 வது ஃபாலோயரா வந்திருக்கேன்! தோ, பதிவ படிச்சுட்டு வர்ரேன்!

K said...

அட, சுருக்கமா இருந்தாலும் நல்லாவே சொல்லியிருக்கீங்க வனத்தைப் பற்றி! அடுத்த பகுதி எப்போ வரும்?

உங்களப்பார்த்தா விவசாயி, மாடுமேய்க்க்கிறவன் மாதிரி தெரியலையே!

வெளங்காதவன்™ said...

//வணக்கம் நண்பா! உங்களோட 54 வது ஃபாலோயரா வந்திருக்கேன்! தோ, பதிவ படிச்சுட்டு வர்ரேன்! ///

வாங்கப்பு...

வெளங்காதவன்™ said...

///அட, சுருக்கமா இருந்தாலும் நல்லாவே சொல்லியிருக்கீங்க வனத்தைப் பற்றி! அடுத்த பகுதி எப்போ வரும்?///

நாளைக்கோ, நாளை மறுநாளோ...
வரும்...

வந்தே தீரும்...
#உங்களை எல்லாம் சந்தோசமா இருக்க விடமாட்டேன்....

வெளங்காதவன்™ said...

///உங்களப்பார்த்தா விவசாயி, மாடுமேய்க்க்கிறவன் மாதிரி தெரியலையே!///

ஹி ஹி ஹி...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நம்ப கடைக்கு வந்ததுக்கு நன்றி நண்பரே . .
தொடர்ந்தது வரவும் .
நானும் உங்க கடைல என்ன இருக்குன்னு பார்க்குறேன் . .