இணைப்பில்

Tuesday, December 20, 2011

என்னமோ போங்க...


சார்!!
கழிசடைங்க சார்!!!!

நான் அப்பவே உன்னாண்ட சொன்னனில்ல சார்?
எங்க தலீவர தலைமைல இருந்து தூக்குனா அப்புடித்தான் நடக்கும்னு.

என்னது? அது மத்திய சர்க்காரா? எங்க தலீவரோட பவர், செனட் வரைக்கும் செல்லும் சார்...

சரி, நான் என் இப்புடி நத்தம் வர்ற வரைக்கும் கீறுறேன்னு பாக்குறியலா?
அது ஒண்ணுமில்ல சார்!!!! 

நம்ம புதுத் தலீவரு, யானைதேசிகன் தலமைல கூடுன, கூட்டத்துல, நம்ம மந்திரி பேசுன பேச்சு!! அதப்பத்திதேன் சொல்ல வாரேன்.........

அடேங்கப்பா!!! எனக்கு மப்பு ஓவரா போயிட்டா வாந்தி எடுப்பேன் சார்.. சத்தியமா வாந்தி எடுப்பேன்...

ஆனா, எடுத்த வாந்தி தப்புன்னு சொல்லி அதையவே முழுங்க மாட்டேன் சார், நம்ம மந்திரி பண்ணுன மாதிரி..   

ஆங்... சொல்ல மறந்துட்டேன்... அந்த மந்திரி அடுத்த எலக்சன்ல கேராளவுல எம்.பி. போஸ்டுக்கு நிக்கிறமாதிரி கேள்விப்பட்டேன்.. பாத்து குத்துங்கப்பு!!!
***********************************************************************************
ஜெ.ஜெ. மேடம்...
குஜாலாகீது....

நீ உன்னோட பார்ட்னர தூக்கிட்டு தனியாக்கீன்ற போது சந்தோசமாக்கீது....

ஆனா ஒண்ணு, நீ சம்பாதிக்கவேண்டியத எல்லாம் அவிங்க சம்பாதிச்சுட்டாங்க....

பொறவு,

நீ தொரத்திவுட்டது நாடகம்னு தெரியாம நெறைய வெங்காயங்க பொழம்புது... 

தொலையட்டும்...

அப்புடியே, அந்த பாலு வெலைய இன்னும் பத்துரூவா ஏத்தும்மா!!

உனக்கு, என்னோட தலைமுறையே கடமைப்படும்...

அப்புறம், நீ உள்ள போறதுக்கு முந்தியே சொல்லிடு, அடுத்த மொதலு யாருன்னு....
*************************************************************************************

எந்த டேமு எவனுக்கோ போவட்டும் சார்.. எந்த உலையும் என்னவேணா ஆவட்டும் சார்... 

இன்னிக்கு என்னோட குறிக்கோளு தேங்கா வெலை எட்டு ரூவா ஆவணும்.... அதேன் சார்...

நீ தி.மு.க., அ.தி.மு.க.ன்னு அடுச்சுக்க!!! ஆனா, எல்லா ஆட்சியலையும் மிடாஸ் சரக்குத்தேன் வாங்கணும் சார்!!!!




வழக்கம்போல அதேதான்.....

வாழ்க ஜனநாயகம்...

-     
   -    வெளங்காதவன்..

Friday, December 16, 2011

சொன்னாங்கோ...

யாராரோ என்னமோ சொன்னாங்கோ....

நல்ல கேளுங்கோ....

@
கனிமொழி

ராசா கைய வெச்சா.. அது ராங்கா...

திமுக மீது எந்தக்குற்றமும் இல்லை என்பதை நிரூபிக்க இது போன்ற ஆய்வு நடவடிக்கைகள் அவசியம்.   ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக தனது தூய்மையை மெய்ப்பிக்கும்.  விசாரணைகளுக்கு திமுக எதிரானது அல்ல என்பதை இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுக்கிறது.   சிபிஐ விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைக்க தயார்.  இந்த விவகாரத்தால் எந்த வகையிலும் திமுக-காங்கிரஸ் உறவு பாதிக்காது.



ஹா..ஹா... கலைஞர் மகள்னா கொக்கா?.. அப்படி போடுக்கா அருவாளை..
இந்த முட்டாப்பயலுக..அதாங்கா..நம்ம  நாட்டுமக்கள்..  ஹி..ஹி அவர்களின் முன்னேறத்துக்காக, தன் குடும்பத்தையே அர்பணித்த கலைஞரை(?),
சீண்டிப்பார்க்கிறாங்க.. விடாதீங்கங்கா...

அக்கா.. உங்கள் ஆங்கிலம் அருமை.. அதைவிட, ராசாவின் ஆங்கிலமும் ஓகோ..ஆகா..   நீங்க ரெண்டு பேரும் மேடையில சேர்ந்து நின்னு பேசனும். அதை நாங்க வாய் பிளந்துட்டு பார்க்கனும்.. அதான் இந்த ஏழை வாக்காளானின் ஆசைக்கா..
 
மணி எனக்கு, கனி உனக்கு..யாரோ சொன்னாங்களாமே.. அப்படீனா என்னாக்கா?..


=======================================================================


@
தங்கபாலு

ஓய்..அங்க பாரு- .உங்க அன்னை.


ஊழலுக்கு காங்கிரஸ் எதிரானது. ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனேயே பதவியிலிருந்து மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா செய்தார். இதுபோல பல உதாரணங்களை கூறலாம். ஊழலுக்கு துணை போக மாட்டோம். உண்மை நிலை தெரியும் வரை ஒருவரை குற்றம்சாட்டுவது தவறு. குற்றச்சாட்டு வந்தவுடனேயே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. அது சரியானதல்ல.




எங்களை பெற்றெடுத்தது(?) அன்னை சோனியா. அவர் காலடி மண்ணெடுத்து, அவரது அடிவருட்டும் வரை,   ஊண் உறக்கம் இன்றி பாடுபடுவோம்.
ராகுல்.... அன்னை பெற்றெடுத்த வைரம்’.   அவரையும்அவரது இன்நாள்காதலியையும், ஆட்சிப்பீடத்தில ஏற்றும்வரை, மலம்கூட கழிப்பதில்லை என சூழுரைக்கின்றேன்.
ஏண்ணே. இதெல்லாம் விட்டுட்டீங்க...போங்கண்ணே.. வயசானா, எல்லாம் மறந்துட்டு வருது..


=======================================================================

@
கலீங்கர்

உம்..இன்னைக்காவது முடி வெட்டனும்.
அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?
//






ரைட்..ரைட்..ரெண்டு நாளா முரசொலில கடிதம் கூட எழுதாம , எங்க போய் தொல.. இருந்தீங்க?.
அறிஞர் அண்ணா இறந்தபோதுகூட விடாமல், கடிதம் எழுதிய கைகள், கட்டுண்டு கிடப்பதின் ரகசியம் என்னா தலை?...
கனியோ.. காயோ?. பழுத்தால் அழுகதான் செய்யும்...



=======================================================================




 @
அன்புமணி ராமதாஸ்
நாளை நமதே.. இந்த நாடும் நமதே...
 
பாமக துணை இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அடுத்த 10 ஆண்டுகளில் புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாகத இளைஞர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவா புரட்சி, இதுவா முன்னேற்றம், இதுவா சமுதாய முன்னேற்றம். மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய தலைவர் இந்தியாவிலேயே ராமதாஸ் மட்டும்தான். அனைவருக்கும் இலவச கல்வி தர பாமக பாடுபடும் என்றார்.



விடுண்ணே..விடுண்ணே.. எதுக்குண்ணே 10 வருஷம்?..

அரசியல் குடும்பங்களும், வாரிசுகளும், சுருட்டும் வேகத்தை பார்த்தால்,( பார்த்தீங்களா.. கோவிச்சிக்கிரீங்க.. வாரிசுனு உங்களை சொல்வேனா?.. இது அவங்களைண்ணே..)  இன்னும் ரெண்டு வருஷத்தில் எல்லா பயலும், பிச்சை எடுக்கும் நிலைக்கு போயிடுவானுக.

அப்போது, கண்டிப்பா, இலவச கல்விதான் கொடுக்கவேண்டி வரும்...ஹி..ஹி..
நடத்துங்க..நடத்துங்க.. ஆமா..வரும் தேர்தலை, யார் வீட்ல கொண்டாடப்போறீக?...



=======================================================================

@இதெல்லாம் நாம...





.
மன்னன் வருவான்..   கதை சொல்லுவான்.
வண்ண வண்ண போஸ்டர் ஒட்டி காயடிப்பான்..

__________________________________________________________
டிஸ்கி1:- இந்தப் பதிவு, ஒரு பன்னாடைப் பதிவரின் பிளாக்கில் இருந்து திருடியது... இது முழுக்க முழுக்க அந்தப் பதிவரைப் பழி வாங்கும் நோக்கில் திருடி வெளியிடப்படுகிறது.....

டிஸ்கி2:- இந்த டிஸ்கி அந்தப் பதிவருக்கு..... "யோவ்... நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா?"

Wednesday, December 7, 2011

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்...

       "சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

      ஆக்கம் எவனோ உயிர்க்கு."

என்று கூறிய வள்ளுவனை வன்மையாகக் கண்டித்து, எனது உரையைத் தொடங்குகிறேன்.

வலையுலகில் சஞ்சரிக்கும் சராசரி தாண்டிய ஜீவன்களே!!!! நீங்கள் மத, இன துவேஷங்களைப் பரப்புகிறீர்கள். நீங்கள் செல்லும் பாதை சரியல்ல. இது போன்ற துவேஷங்களைத் தடை செய்யக்கோரி நாங்கள் சமூக வலைதளங்களைக் கண்டிக்கும் அதே வேளையில், அவர்களாகவே சென்சார் செய்து வெளியிட நிர்பந்திக்கிறோம். இல்லையெனில், எங்கள் அன்னை தலைமையிலான ஆட்சியில், அதற்காக விதிமுறைகளை உருவாக்குவோம்.

உண்மையைச் சொன்னால், மத இன துவேஷங்களைச் செய்வதாலே இதைச் செய்கிறோம் என எங்கள் கருத்துக்கு வரவேற்புத் தரும் அனைவருக்கும், இன்கம் டேக்சை குறைக்க வழிவகை செய்யும் சட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆனால், காமன்வெல்த் ஊழல், 2G ஊழல், கம்யூனிகேசன் இணைப்பு, சுரண்டல் இந்த வார்த்தைகளை உபயோகித்துச் செய்தி பரப்புபவர்கள் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளவும், சட்ட ஆலோசகர்களை வைத்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், முன்னணிப் பத்திரிகைகள் பல எங்களிடம் விலைபோயிவிட்டதால், இனி, இந்தியாவில் செயல்படும் பல சமூக வலைதலங்களையும் நமது கட்சியோ, அல்லது அரசோ வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விற்கத் தயங்கும் தள அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, தனி குண்டர் படை முடிக்கிவிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மீடியா என்ற கேட்டகிரியில் வரவே வராது; அது நட்பு வட்டம், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், கலை இவற்றையெல்லாம் தாண்டி டேட்டிங் வரை பறந்து விரிந்துள்ளது. இவ்வாறான, வலைகளில் அரசியல் பேசுவது குற்றம். அவ்வாறு பேசினாலும், எங்கள் பிரதமர், அன்னை போன்றோரைப் பற்றிய தவறான படங்களை வெளியிடுதல் மிகப்பெரும் குற்றம்.

இந்தியாவுக்கு இதற்கா சுதந்திரம் கொடுத்தான் வெள்ளையன்? இதற்காகவா மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு போன்றோர் பாடுபட்டனர்? இதற்காகவா நம் “காங்கிரஸ்” தோற்றுவிக்கப்பட்டது?

இல்லை.. இல்லை... இல்லவே இல்லை.....

ஆகவே, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க சமூக வலைகளில் நம் அரசின் தலையீடு அவசியமாகிறது. இது ஏன் எனக் கேட்கத்துடிக்கும், பா.ஜ.க. க்காரர்களிடம் கேட்கிறேன், “உங்களைப் பற்றிய அவதூறுகளை எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்வீர்?”. எனினும், நீங்கள் வெளியிடும் பவர் ஸ்டார், கேப்டன் மற்றும் அணில் போன்றோரின் படங்கள் சென்சார் இன்றி வெளியிடவும் ஆவண செய்யப்படும்.

ஒரே செய்தியை அழுத்திக் கூறுவதால், அது பொய்யாக இருக்குமோ என்று தொண்டர்கள் எண்ணுவது அச்சமாக இருக்கிறது. திரும்பத் திரும்பக் கூறுவது, அதன் அவசியத்தை வலியுறுத்தவே.

ஆனால், இந்தச் சமூக வலைதளங்களுக்கு என்னவொரு ஏளனம்? நாம் நடத்தும் ஆட்சியில், நமது கோட்பாடுகளை ஏற்காமல், “அமெரிக்காவில் எப்படியோ இங்கும் அப்படி” என்னும் ஏகாதிபத்திய மனநிலையில் அவர்கள் உள்ளனர். இவர்களையெல்லாம் தொண்டர்களாகிய நீங்கள் நினைப்பதுபோல் இம்மீடியட்டா ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், பொதுக்குழு கூட்டி முடிவெடுப்போம்.

சமூக வலைத்தளங்களின் அராஜகம், நமது ஆட்சியில் ஒழியப்போகிறது என்று நினைத்தால், அனைத்து உறுப்புகளுள் சந்தோசத்தில் சிறகடித்துப் பறக்கின்றன.

ஆதலால், அனைத்து வலையுலக சஞ்சரிகளே!!!!

அன்னையின் தலைமையில் ஒன்றிணைவோம்...

எதிர்த்திடுவோம் அராஜகத்தை.....

ஒழித்திடுவோம் சமூக வலைத்தளங்களை!!!!!!!



வாழ்க ஜனநாயகம்.....

இங்ஙனம்,

அடிப்பொடி காங்கிரஸ் தொண்டன்,

வெளங்காதவன்.

Sunday, October 30, 2011

குழப்பம் (சவால் சிறுகதை-2011)


குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை.

சிவா தன் கையில் இருந்த இரண்டு துருப்புச் சீட்டுக்களையும் பார்த்துக் குழம்பிக்கொண்டிருந்தான். அதே நேரத்தில் விஷ்ணுவின் அழைப்பு வரவும், தன் தலைமுடியைக் கோதிவிட்ட இடக்கையால் போனைப் பார்த்தான். அதில் தன் பிம்பம் காட்டும் ஸ்க்ரீனை வெறித்தபடி, மீண்டும் குழப்பத்தில் ஆள்ந்தான்...

இதற்குள், இந்தக் கதைக்கு சம்பந்தமான ஆளுங்களைப் பார்த்திடுவோம்.
விஷ்ணு- இவன் ஒரு கல்லூரிப் பையன். மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படிப்பதாக ஞாபகம். சிவா ரூட் விடும் பெண்ணின் பக்கத்து வீடு என்பதால், இவனை கடந்த இரண்டு வருடங்களாகக் சிவாவுக்குத் தெரியும்.

எஸ்.பி. கோகுல்- சூலூர் சமஸ்தானத்திலே பழனிச்சாமி- உமா ஆகியோரின் ஒரே மகன். பெரிய அரசியல்வாதி. ஆங், இவர்தான் சிவா ரூட் விடும் பிகரின் அப்பா. 

கீதா- இவள்.... இவள்..... சிவாவின் கனவுக் கண்ணி. எஸ்.பி.கோகுலின் உயரத்தையும், பேரழைகையும் கொண்டிருந்தாள். கொஞ்சம் மாநிறம். எனினும், சிவாவுக்கு அவளைப் பிடித்தே இருந்தது.
வருத்தமற்ற நொடிகள்
ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,
உன் செவ்விதழ் சிந்தும்
முத்தத்திற்காய்!”
என்றெல்லாம் அவனைக் கவிதை எழுத வைத்த வித்தைக்காரி.

இப்போ, சிவாவின் குழப்பத்துக்குக் காரணம் தேடிப் போவோமா?

பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பே, சிவா தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தான். அவளும் சம்மதிக்கவே, நிதமும் அவளுடன் கடலை போட்டுவந்தான். சிவாவுக்கு ஏழரை உச்சத்தில் இருந்த நேரம், அவளின் பிறந்தநாள் வந்தது. அவனும் அவளுக்கு ஒரு செல் போன் வாங்கி பிரசண்ட் பண்ணினான்.

அதுல வந்தது வினை. பிறந்தநாளுக்கு அடுத்த ரெண்டு நாள், புது போனுல கடலை போச்சு. இப்போ, அந்த போனு அவிங்க அப்பன் கையுல. பொறவுதான் அவிங்க அப்பன் கூப்பிட்டான் சிவாவை. போச்சு, தெரிஞ்சு போச்சு. அதனால குடும்பத்தோட போயிப் பொண்ணுக் கேட்கப் போயிட்டான் சிவா.

ஒரு வழியா கண்ணாலத்துக்கு ஏற்பாடும் ஆயிடுச்சு. பொறவு? அரசியல்வாதியின் மக ஆச்சே. ஓடிப்போயிக் கண்ணாலம் பண்ணுனா கேவலம்னு, அரேஞ்சுடு மேரேஜூக்கு சம்மதம் சொல்லிட்டாரு.

இப்புடியான நெலைமைலதான், விஷ்ணு இப்புடி ரெண்டு துருப்புச்சீட்ட தயாரிச்சு இருக்கான். அவன் பர்சு, சிவாவோட பேக்ல வச்சிருந்ததாலையும், அடுத்தவன் பர்சனல நோண்டுற புத்தி இருந்ததாலையும், இந்த ரெண்டு சீட்டும் கெடச்சுது சிவாவுக்கு.

மீண்டும் விஷ்ணுவின் கால். இரு விஷ்ணுவையே கேப்போம்னு அட்டெண்ட் பண்ணினான் சிவா. “ஹலோ” என்ற சம்பிரதாயமான வார்த்தையை உதிர்த்தான் சிவா.

இணைப்பு உடனே துண்டிக்கப்பட்டது.

சிவா, மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

“S W H2 6F- என்பது முறையே Soda, Water, Half-2, 65(Fiveவுக்கு F) என்பதையும், மற்றொரு சீட்டு, சிவாவின் பரம எதிரி தினகருக்கு (சிவாவின் ஆளை கண்ணாலம் பண்ண முன்பு ஒரு காலத்தில் ரூட் போட்டவன்) என்பதையும் சிவா கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை.

கதை முடிவு இது தான். சிவா எப்படி என விஷ்ணுவிடம் கேட்க, அவன் பிறகு சொல்கிறேன் எனச் சொல்லிவிட்டு, தினகருடன் சேர்ந்து கண்ணாலத்தை நிறுத்த பிளான் பண்ணி இருந்தான்(அவனுக்கு என்ன பொறாமையோ?). அதனால், சிவா ஒரு குடிகாரன் என்ற பொய்யைக் கொண்ட ஒரு குறிப்பால் உணர்த்த விரும்பினான் விஷ்ணு. மற்றொரு சீட்டை, தினகருக்கும் அனுப்ப எத்தனித்தான் போலும். பாவம், அவர்களின் திட்டம். இப்போது அந்தச் சீட்டுகள் சிவாவைக் குழப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

சிவா-கீதா திருமணம் இனிதே முடிவுற வாழ்த்துக்களுடன்,

-வெளங்காதவன்.

Saturday, October 15, 2011

தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!


முஸ்கி- இந்தப் பதிவைப் படித்தபின் தங்கள் ஓட்டைப் பதியவும்...
__________________________________________________________________________


தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு,

பொள்ளாச்சியிலிருந்து வெளங்காதவன் எழுதிக்கிறது. அன்னைக்கும், ஐயாவுக்கும் கடிதம் எழுதிய கையால், உமக்கும் ஒரு கடிதம்
எழுதவைத்து விட்டீர். வாழ்க!

இந்தக் கடுதாசி எழுதக் காரணம்: நீங்களேதான்!

சக பதிவர் அவர்களின் இந்த இடுகையில் உங்களின் பின்னூட்டங்கள்,
மயிர்க்கூச்செறியச் செய்தன என்றால் அது மிகையாகாது! உங்களின் மொழி ஆளுகைகளும், வார்த்தைப் பிரயோகங்களும், அடேங்கப்பா! இன்றைய அரசியல்வியாதிகளையே மிஞ்சிவிட்டீர் போங்கள்!

உங்களிடம் நேரடியாக சில விளக்கங்களைக் கேட்கவே இந்தக் கடிதம்.

“நம்ம பன்னிக்குட்டி அண்ணன் என்ன தப்பா எழுதிட்டாரு?”

இதுக்கு பதில கடைசியா சொல்லுங்க.

--------------------------------------------------------------------------------------------

நீங்கள் அளித்த பின்னூட்டங்கள் தரமானவையா? மற்றுமொருதரம் உங்களின் பின்னூட்டங்களை நினைவுகூற விரும்புகிறேன்.

-/பெயரிலி. said...

வைரை சதீஷ்

ஆஷிக்கின் பதிவிலே தமிழ்மணம் பற்றி நீங்கஇட்டபின்னூட்டத்துக்குப்
பின்னாலும், காலை மூன்றரை மணிநேர வண்டியோட்டத்துக்கு முன்னாலிருந்து
உங்களின் தமிழ்மணத்திலே "என் இடுகைகள் தோன்றவில்லையே" என்ற தொடர்ச்சியான
அஞ்சல்களுக்குப் பின்னால் தொடர்ந்து அப்பிரச்சனையைத் தீர்க்க, நானும்
தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால்,
உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.

It is irony; if these people are the one tamilmanam thinks to

aggregate for keeping Tamil alive, it should simply let Tamil die.
Bullshit! Just for one-min attention, do anything without ethics.//


ஆகச்சிறந்த ஒரு பின்னூட்டம். எதைச் சூப்பவேண்டுமெனச் சொல்லாததால் விரல் எனக் கொள்ளலாம். என்ன ஒரு பின்னூட்டம்? அதிலும் தொழில் தர்மமின்றி ஏதுமொரு துறையுண்டா என்று கேட்டிருக்கிறீரே நீங்கள். இதுதான் உமது தொழில் தர்மமா? எதிர்க்கருத்தை ஏற்கவியலாத உம் மூடத்தனதிற்கு சாட்சியாக வேண்டுமானால் கொள்ளலாம். 

TERROR-PANDIYAN(VAS) said...
@-/பெயரிலி.

Hi, How to believe you are from Tamilmanam and not the one using

un-parliamentary words to spoil Tamilmanam name?

I cant believe such a unprofessional behavior from Tamilmanam. Rest

after your reply.

Gud Luck!

Terror.

என்ற டெரர் பாண்டியனின் பின்னூட்டத்துக்கு தங்களின்
எதிர்ப்பின்னூட்டம்(எதிர்ப்பாட்டு போல),


-/பெயரிலி. said...
Mr. Terror,

If you haven't noticed it is in my own ID (-/peyarili.) not with the
TM ID. TM does not come and post comments in each blogger's comment.
TM responds only in its own blog or through its admin e-mail. You were
given the very similar -but the official dry version- content through
TM e-mail when your blog was removed without "pun" in it.

However as a person who took the decision, I do have to explain it

here as you have already allowed another "peyarili" who sounded like
"-/peyarili." to make fun.

However I am very much amused that you who had behaved with skewed

contents now talk about unparliamentary words. In my 17 yrs of
weathered Internet life, I had seen real deals, and the rattle snakes.
You, my friend, fall in the second category. It is my personal
observation.

Now before unleashing the fake peyarili again, let me tell you; your

blog is not funny either. It really sucks and may amuse to the Grades
3-8 kids and people in that mental age.

என்றவொரு திண்மையான முடிவற்ற, வம்பளக்கின்ற உரையைப் பதிவு செய்தீர்.

 -/பெயரிலி. said...
/என்றும் நாங்கள் ஆசை படுவது தமிழ்மணத்தில் நல்ல ரேங்க் வேண்டித்தான்.
  நாங்கள் விளையாட்டாய் போடும் பதிவுகளை எல்லாம் கருத்தில் கொண்டு எதற்காக நடவடிக்கை எடுக்கிறீர்கள்./

அது சரி; அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறவிதத்திலேதான் இருக்கு.


I (and other TM moderators) are not running TM full time. We work as

Professors, IT specialists, Engineers and scientists for our living.
We try to run TM for our passion and the objectives that we have. We
can easlity run TM a successful commercial venture like many try and
do if we allow commercial blogs, cinema blogs, religious blogs, cut &
paste blogs, images of naked bodies. However we try to keep them out
for simple reason; NO original creativity. Now when one tries to joke,
s/he should understand that we RESPONSE every request/query (even for
dumb ones); may be we are late. See, I remmoved this blog when I was
in one city. Now I had to run to another for a conference, and sitting
in the hotel room in the early morning 6:00 responding idiotic
questions that in the first place had no need to arise. Now what the
**** about "TM is not responding about கட்டணசேவை questions" statement?

If you look into this terror biodata, he skewed the facts. making fun

is different from making deliberate misguiding statements in the name
of fun.

If one had looked into TM page you would know who runs TM too. Now,

accusing TM for your laziness (or non-interest) is not fun.

என்ற உமது கமண்டில், விளக்கத்தைத் தவிர தமிழ் வார்த்தைகளின் தரம்??????
  அடடடா!
நானாவது விவசாயி. ஏதோ வாய்க்கு வந்ததைப் பேசுகிறேன். உம்மைப் பற்றி நீரே,
“நான் பெரிய அப்பாடக்கர்” என்று சொல்லி இருப்பதால் கேக்குறேன் “யாருமற்ற நேரங்களில், இடது கையால் உணவு அருந்துவீரோ?”.



// -/பெயரிலி. said...
அடப்பாவிங்களா, தாடி, நெஞ்சு, அக்குள், கால் மயிரெல்லாம் மண்மூடி, மூழ்கி
நிற்கிறேனே! சும்மா மீசையிலே மண்பட்டதைமட்டும்
தட்டிக்கொண்டிருக்கின்றீர்களே! அடடா! கண்ணுமா வெள்ளை? என்ன
டெரர்ர்ரிஸ்டோ! கொடுமைடா கடவுளே!

/Before that try to make your profile visible. so that we can identify

the fake "Peyarili"/
Interestibg, so "YOU CAN IDENTIFY the fake "Peyarili". Is it you, isn't it? ;-)

by I have using the name -/peyarili. for more than six years ;-)

http://peyarili.blogdrive.com/

as usual, if you are lazy and looking for weak target make fun. This
time, either you and your kummi sidekicks are going to learn how to
learn how to keep your trousers tight around your hips or...there will
be no ORs here.

/உங்களுக்குள்ள இவ்வளவு சோகமா. த்சோ த்சோ. /

கரெக்ட் மிஸ்டர் வேதாளம். பன்னிக்குட்டி, வேதாளம், வை கை, வை ரை,
தூளுடுக்கள் எல்லாம் வைச்சு விலங்குப்பண்ணையை நடத்தினா, நியாயமா பாத்தா கோபமேதான் டர்ர்ர்னு டெரர்ர்ர்ரிஸ்டா வந்திருக்கனும். மக்களோடு கோபிக்கலாம்; முட்டும் மாக்களோடு ஆகுமா, என்ன? பன்னிக்குட்டி டெரர்ர்ரிஸ்ட் ஒன்னும் பாம்வெடி பண்ண இலாயக்கில்லன்னு சுத்தமா தெரிஞ்சாச்சு. நீங்க சொல்லி அவர் நமுத்துப்போன காமவெடி பன்னினாலும் பரவாயில்லை. கேட்டுக்கிறேன். பதிவுதான் தமிழ்மணத்திலே திரட்டப்படவேண்டியதில்லையே! கொத்துபராட்டா, நான்வெஜ்&சாண்ட்விட்ஜ் ஒன் லைனர் காம வெடி என்ன முழுசா அவுத்துபோட்ட போட்டோ காமெடி கட் & பேஸ்ட் பண்ணினாலும், பாத்து சகிச்சு..அடச்சே! ரசிச்சுக்கிறோம்...//



ஓ! நீர் பட்டாசு வெடிக்கனும்ட்ற ஆசையில வந்தீரா? மற்ற பதிவர்கள் பற்றிய உம்ம வரையறை மெய்சிலிர்க்க வக்கீது! நீர்தான் பெரிய அப்பாடக்கர். அப்புறம் பேண்ட் போடுறதப்பத்தியெல்லாம் சொல்லித்தரீங்களே! அனுபவமா?
 
அப்புடியே, ஏதாவது சிக்கிடுச்சுனா எடுத்து விடுறது எப்புடின்னு சொல்லிக்
கொடுங்க சார்!

//-/பெயரிலி. said...
என்பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன்


அரைவேக்காடு விகடனில் மாணவ நிருபராக" இருந்ததைச் சாதனை என்று
  எண்ணுகின்றவர்களிடம் அதிகம் எதிர்பார்த்த என் பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். இனி இப்படியான - பாவல்விதைபோட்டுச்
சுரைக்காய் முளைக்குமென எண்ணும் வகையான-பெருங்குற்றங்களை விகடன் மாணவர் நிருபரென பேயோடேட்டா வைத்திருக்கின்றவர்களிடம் எதிர்பார்க்கமாட்டேன்.//

உங்களின் ஊடக வாசனை, நடு மசுர நட்டுக்க வக்கிது தல. தமிழ்மணத்தைப் பற்றி உண்மையை எழுதினாலே உமக்கு, அதுக்கு(மூக்கு எனக் கொள்க) மேல கோவம் வருதே! ஒரு சிறந்த தமிழ் பத்திரிக்கையைப் பற்றி...  என்ன சொல்வது?
நீங்க சரோஜாதேவி புத்தகம் படிப்பவர்னு தெரியாமப் போச்சே!

// -/பெயரிலி. said...
/இவ்ளோ நாள் உங்களுக்கு ஏன் வரல? நல்லா டாட்டா உப்பு போடு சாப்புடுங்க :))/

ஏன்னா ஒரு பக்கம் பக்கா டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட

போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப்
பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு
தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?//

வேணாம் சார் கொழந்தைங்க பயந்துரும்....

 //  -/பெயரிலி. said...
/இனி வேற ப்ளாக் ஒப்பன் பண்ணி உங்களுக்கு அந்த படமா போட்டு பதிவு
போடறோம்..நல்லா ரசிச்சு பாருங்க :))/

கஷ்டப்படாதீங்க. பார்க்கவேண்டியதெல்லாம், உங்களுக்கு மூக்குக்குக் கீழே
மீசை அரும்புற வயசு வரக்குமுன்னாலேயே நாங்க பாத்தாச்சு. further I do not need you "cut & paste" for me; even on net, I did start with "persian kitty's collection of links" when few pornographic links were out there. probably you might not know the difference between a boy and a girl then ;-) If I want I know where to click from straight to scatology.

I do not care about pornography. However what I hate are
1. hypocrisy of posting semi-nude posters in the name of getting clicks and making it hot OR posting with the pseudo-claim, "I am
writing an article opposing such pornography."
1. when one asks to play the rules of the game agrees only to violate,
and then cry foul over the actions. //

ஓ! அந்த மஜா மல்லிகா பக்கத்துக்கும் நீங்கதான் நிர்வாகியா?
// -/பெயரிலி. said...
///"I am writing an article opposing such pornography."///
ha ..ha ..good joke of the year ..!!/


Yes, mr.komberi mookan, this is the problem with the people who reads

between the lines ;-)

முகத்திரையை கிழிக்க ஒன்றும் பெரிதாக மறைத்துக்கொண்டு உலாவவில்லையே!


/.வார்த்தைகள் தவறாக பயன்படுத்தினால் நாளை கூகிள பஸ்சிலும் உங்கள் முக

திரையை கிழிக்கும் படி ஆக்கிவிடாதீர்கள் .வார்த்தைகள் தடித்து வந்தால்
அதுவும் நடக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்/

பொடிப்பசங்களா, இந்த நெட்ரவுடித்தனத்தை உங்க சகநெட்ரவுடிங்ககிட்ட

வைச்சுக்குங்க. இந்த முகத்திரையை கிழிக்கிற பிளேடை மட்டும்
வெச்சுக்கிட்டு என்ன டெரர்ர்ர்ரிஸ்டோ! என்ன கும்மிக்கும்பலோ! சே! ஒரு
சாதா பர்ஸைக் கிழிக்க முன்னாடியே பிளேடு பர்ர்ர்ர்னுது; பர்ஸ் இரைஞ்சு
சிரிக்குது. போங்கப்பா! போயி உங்க அப்பா, தாத்தா, அங்கிளுங்க இருந்தா
அனுப்புங்க. அவங்களாச்சும் தேறுறானுங்களான்னு பார்ப்போம்.

நமக்கு வாய்த்த பதிவர்கள் மிகவும் கடின உரைப்பாளிகள்; வாய்மட்டும் காதவழிநீளம்
என்றெல்லாம் சர்ச்சையான பின்னூட்டங்கள்?!!!
நீள்கின்றன இன்னும்......


இதனால் தாங்கள் சாதித்தது என்ன?
உங்கள் முகத்திரையை நீரே கிழித்துக்கொண்டீர்.


பிறகு எனக்கு ஒரு சந்தேகம்.தமிழ்மணத்துல நீங்க ஒருத்தர்தான் நிர்வாகியா? மத்தவங்க யாராவது இருக்காங்களா? இருந்தா ஏன் வாயே திறக்க மாட்டராங்க? அவங்களையும் நீங்க இதே மாதிரி பேசிதான் மூடிட்டு இருக்க வெச்சி இருக்கீங்களா? வாயை... இந்தத் தமிழ்மணத்தில் இருக்கும் நீர் மட்டும்தான் இது போல தறுக்கனா(இந்த வார்த்தைக்குப் பன்மை இல்லை) இல்லை, உமது நிர்வாகிகள் அனைவரும் அப்படியேவா? கொஞ்சம் விளக்கினால் சுகமாயிருக்கும்.

அப்புறம், எனக்கு மெயில் பண்ணத் தெரியாத காரணத்தினால் இங்கே சொல்கிறேன்.  என்னை தமிழ் மணம் என்ற மணம்வீசும் பூங்காவிலிருந்து(???) விலக்கிவிடுங்கள். புண்ணியமாய்ப் போகும்.
ஆங்... இப்போ சொல்லுங்கோ....

“நம்ம பன்னிக்குட்டி அண்ணன் என்ன தப்பா எழுதிட்டாரு?”

-    வெளங்காதவன்.

டிஸ்கி: பன்னிக்குட்டியார் எழுதிய பதிவில், நானும் ஒரு மொக்கை கமெண்டு இட்டுவிட்டு, பொழைப்பைப் பாக்கப் போயிட்டேன். இன்னிக்கு வந்து பார்த்தால், இப்படியெல்லாம் கமெண்டு வந்து இருக்கு!

பதிவர்களே! இனிமேலும் இந்தத் தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதைப் பற்றி யோசித்தேன். எனினும் இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இருந்தால் நெகடிவ் அல்லது மைனஸ் ஓட்டு மட்டுமே போடும்படி, கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மண நிர்வாகிகளின் தரம் தாழ்ந்த செயலினைச் சுட்டிக்காட்டவே இந்தப் பதிவு.