உடன்பிறப்பே,
சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் என்னை, இங்ஙனம் ஓர் மடல் வரையக் காலம் கனிந்திருக்கிறது. நானும் நீயும் காத்திருந்த நேரம் இதுதான். சங்கரன் கோவிலிலே இடைத் தேர்தல் வந்துவிட்டது. இருட்டில் விடப்பட்ட ஆட்சியில், நமக்கொரு சவால். சவாலைச் சாதனையாக்குவதில், இந்தத் தலைவனுக்குத் தேவையான தொண்டன் நீ!
இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு, வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். எழுச்சிமிகு வீரனாய், வீறு கொண்டெழுந்து வா! கேட்கிறது உன் மனசாட்சியின் குரல். அதற்கெல்லாம் பதிலளிக்கும் நேரம் இதோ, வந்துவிட்டது. எனினும், பதிலளிக்க இயலாத அளவு பணிச்சுமையுடன் நான்குடும்பத்துக்காய் கட்சிக்காய் அயராது உழைத்து வருகிறேன் என்பதை நீயறிவாய்.
காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய். ஆம், இனப் படுகொலைக்கு எதிராய், முதன்முதலில் திருவாய் மலர்ந்தவன் நான்தான். மத்திய சர்க்காருக்கு நான் கொடுத்த நெருக்கடி தாங்காமல்தான், போர் நிறுத்தம் அறிவித்தார்கள் என்பதை இந்த உலகமே அறியும்.
இதோ, இப்போது ஐக்கிய நாடுகள் சபையினிலே லங்கைப்போருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. மாற்றினத்தவன் கொடுக்கும் ஆதரவைக் கூட, நீயும் நானும் கொடுத்த/கொடுக்கும் ஆதரவைக் கூட, மத்திய அரசு தராதது கண்டு, வெகுண்டேழுகிறேன் உடன்பிறப்பே!
போர் மேகங்கள் திரண்டிருந்த வேளையிலே, நான் உன் பணியாற்ற எமது சட்டசபையிலே தீர்மானம் போட்டுக்கொண்டிருந்தேன் என்பதை நான் சொல்லாமலே நீ அறிவாயடா எனதருமை உடன்பிறப்பே. வரலாற்றைத் திரித்துக் கூறும் கருங்காலிகளுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"
- மனசாட்சியைக் கழற்றிவைத்துவிட்டு,
மு.க.
சொல்லொண்ணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் என்னை, இங்ஙனம் ஓர் மடல் வரையக் காலம் கனிந்திருக்கிறது. நானும் நீயும் காத்திருந்த நேரம் இதுதான். சங்கரன் கோவிலிலே இடைத் தேர்தல் வந்துவிட்டது. இருட்டில் விடப்பட்ட ஆட்சியில், நமக்கொரு சவால். சவாலைச் சாதனையாக்குவதில், இந்தத் தலைவனுக்குத் தேவையான தொண்டன் நீ!
இவ்வளவு காலம் கட்சிக்கென உழைத்த உனக்கு, வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறான் உன் தலைவன். எழுச்சிமிகு வீரனாய், வீறு கொண்டெழுந்து வா! கேட்கிறது உன் மனசாட்சியின் குரல். அதற்கெல்லாம் பதிலளிக்கும் நேரம் இதோ, வந்துவிட்டது. எனினும், பதிலளிக்க இயலாத அளவு பணிச்சுமையுடன் நான்
காலன் வந்து எம்மக்களைக் காவு வாங்கினான் லங்கையிலே. அப்போது நான் எழுதாத கடிதமில்லை, அனுப்பத தந்தியில்லை என்பதை கழக உடன்பிறப்பே நீயறிவாய். ஆம், இனப் படுகொலைக்கு எதிராய், முதன்முதலில் திருவாய் மலர்ந்தவன் நான்தான். மத்திய சர்க்காருக்கு நான் கொடுத்த நெருக்கடி தாங்காமல்தான், போர் நிறுத்தம் அறிவித்தார்கள் என்பதை இந்த உலகமே அறியும்.
இதோ, இப்போது ஐக்கிய நாடுகள் சபையினிலே லங்கைப்போருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்தது அமெரிக்கா. மாற்றினத்தவன் கொடுக்கும் ஆதரவைக் கூட, நீயும் நானும் கொடுத்த/கொடுக்கும் ஆதரவைக் கூட, மத்திய அரசு தராதது கண்டு, வெகுண்டேழுகிறேன் உடன்பிறப்பே!
போர் மேகங்கள் திரண்டிருந்த வேளையிலே, நான் உன் பணியாற்ற எமது சட்டசபையிலே தீர்மானம் போட்டுக்கொண்டிருந்தேன் என்பதை நான் சொல்லாமலே நீ அறிவாயடா எனதருமை உடன்பிறப்பே. வரலாற்றைத் திரித்துக் கூறும் கருங்காலிகளுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
"தமிழர்களே, தமிழர்களே! என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விடமாட்டேன்"
- மனசாட்சியைக் கழற்றிவைத்துவிட்டு,
மு.க.
டிஸ்கி:-வேதனைகளை சீரியசான வார்த்தைகளாக்கும் கலை இன்னும் கைவரப் பெறவில்லை. மன்னியுங்கள்!