இணைப்பில்

Sunday, September 25, 2011

ஆமாமா! அதேதான்!


மேதகு அன்னைஜி அவர்களுக்கு,

நமது கட்சியின் தளபதி( அவரு பேரு என்னையா? சீக்கிரம் சொல்லுங்க) “தொங்கபாலு” ஆதரவுடன், சேனாதிபதி “யுவராசு” அவர்களின் நல்லாசியுடன் வெளங்காதவன் எழுதிக்கறதுங்க...

நாஞ்சொகந்தேன்.... உங்க மேனி சொகத்த தெரிஞ்சுக்க ஒரு ஆச... அதேன் இந்தக் கடுதாசி!

வெளிநாடு போயி ஆப்பரேசன் பண்ணிட்டதா சொன்னாங்க... ஆத்தா! உனக்காக நான் போகாத கோயிலில்ல, வேண்டாத தெய்வமில்ல... மக்களைப் பெற்ற மகராசி, நீ திரும்பி வந்ததும்தான் போன உசுரு திரும்புச்சு........

அப்புறம் ராகுலு தம்பி, மேனகா அம்மணி எல்லாரும் சொகந்தானுங்களா?

நம்ம மாமா மன்மோகன் சிங்கு, ஐ.நா. சவை போயிருக்காருங்கலாமா? வந்தா கேட்டதாச் சொல்லுங்க...

தாயி, நம்ம ஊர்ல எலக்சன் கள கட்டிருச்சு..... எங்க, நம்ம கட்சியை வஞ்சித்த(??!) தி.மு.க. இல்ல, ஜான்சி மகராசிகூட கூட்டு வச்சிருமோன்னு பயந்துட்டு இருந்தேன்.... நீ எடுத்தியே தாயி, மக்காளாட்சி மலர, சனநாயகம் செழிக்க ஒரு முடிவு...

எனக்கெல்லாம், அதைக் கேட்டது கண்ணுல தண்ணி(ஆனந்தக் கண்ணீர் எனக் கொள்க) வந்திருச்சு ஆத்தா! நீ மேல பண்ணுன சாதனைகள, நம்ம விசுவாசிகள், அடிபொடிகள் நம்ம ஊருலயும் பண்ணனும் ஆத்தா! கழகங்கள் சுரண்டிய உள்ளாட்சி வளங்களை மீட்டெடுத்து தரணும் தாயே!

நீயும், தலீவரும் சேந்து பண்ணின(??!!), தமிழர்களுக்காகப் பண்ணின, பண்ணிக் கொண்டிருக்கிற(?!!) சாதனைகளை, இனிமேலும் பண்ணோ பண்ணுன்னு பண்ணிட தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்த விடிவெள்ளியே!

தமிழர்கள் மானமற்றவர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட அன்னையே! இலங்கைப்படுகொலைக்கும், மீனவர்கள் படுகொலைக்கும் தலைகூட ஆட்டாத அகில இந்திய அன்னையே!

வா... உள்ளாட்சித் தேர்தலிலே தனித்துப் போட்டியிட்டு, கட்சி வளர்ப்போம் வா!

இந்திராவின் மருமகளே வா!

ஆட்சி அமைத்திட வா!

-ஈழத்தை மறந்த உண்மைத் தமிழ் விசுவாசி,

வெளங்காதவன்.

மக்களுக்கு-

அப்பு,

நடந்ததெல்லாம் மறந்துவிட்டு, வேட்டியைத் தொடைவரை ஏற்றிக் கட்டி, கட்சி வளர்க்கப் பாடுபடுவோம்...

தங்கபாலு’வின் தலைமையில் ஒன்றிணைவோம்...

வென்றிடுவோம் தமிழகத்தை!

மன்னன் வருவான்,

கதை சொல்லுவான்,

காயடிப்பான்!
(வசன உதவி- பட்டாபட்டி, சிங்கை).

கடேசியா-

சத்தியமா சொல்றேன்யா! மானங்கெட்ட ஆளுங்கய்யா நாமெல்லாம்!


49 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

kalakkitta thalaivare

வெளங்காதவன்™ said...

//ரஹீம் கஸாலி said...

kalakkitta thalaivare
///

வாங்கண்ணே!

:-)

MANO நாஞ்சில் மனோ said...

haa ha ha ha ha ha nallaa sonnenga ponga...!!!

வெளங்காதவன்™ said...

//MANO நாஞ்சில் மனோ said...

haa ha ha ha ha ha nallaa sonnenga ponga...!!!
///

ஹி ஹி ஹி....

சக்தி கல்வி மையம் said...

ஈழத்தை மறந்த உண்மைத் தமிழ் விசுவாசி,/// சாட்டையடி..

வெளங்காதவன்™ said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஈழத்தை மறந்த உண்மைத் தமிழ் விசுவாசி,/// சாட்டையடி..
////

ஹி ஹி ஹி...

#உண்மை அப்பு!

Anonymous said...

அடிங்

வெளங்காதவன்™ said...

//Anonymous said...

அடிங்////

அண்ணே! அக்கா!
உங்க பேர சொல்லிட்டு அடிங்க....
அவ்வ்வ்வ்

நாய் நக்ஸ் said...

வாங்க அப்பு ...நீங்கதானா அது ....???

வெளங்காதவன்™ said...

///NAAI-NAKKS said...

வாங்க அப்பு ...நீங்கதானா அது ....???
////

வாங்கப்பு!
ஏனப்பு?

நாய் நக்ஸ் said...

ஒரு ஆள் குறையுதே என்று பார்தேன் ,,,ப#%%^&*&* தூக்க ???

vetha (kovaikkavi) said...

உங்க பேச்சு தழிழுங்க...நெனைக்க நெனைக்க சிரிப்பயிருக்குங்க....இந்த சிரிப்பாயிருக்குங்கு என்றதை எல்லாத்துக்கும் சேர்த்து எடுக்கலாமுங்க..எல்லாத்துக்கும்....(வெளங்காதவரு போல எழுத முயற்சித்துள்ளேன்)
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

நாய் நக்ஸ் said...

ப ,,,,பா ,,,,$%^&*^& தூக்க

Yoga.s.FR said...

இத்தோட ஒழியணும்,சனி!(அக்டோபர் 15 கடைசி புரட்டாதி சனி விரதம்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால உள்ளாட்சித் தேர்தல்லயும் ஆட்சிய புடிக்கனுமா உங்களுக்கு?

வெங்கட் said...

// உள்ளாட்சித் தேர்தலிலே தனித்துப் போட்டியிட்டு,
கட்சி வளர்ப்போம் வா! //

கட்சியா., கோஷ்டியா தம்பி..?!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

//ங்கொய்யால உள்ளாட்சித் தேர்தல்லயும்
ஆட்சிய புடிக்கனுமா உங்களுக்கு?//

ஏன் முடியாதா..?

எங்க தானை தலிவர் தங்கபாலு மட்டும்
மனசு வெச்சா.. அமெரிக்காவுலயே
ஆட்சியை பிடிப்போம்...

காந்தி தாத்தா சொன்னாரேன்னு
" சுதேசி கொள்கைக்காக " பார்க்கறோம்.. ஆமா..

வெளங்காதவன்™ said...

///NAAI-NAKKS said...

ஒரு ஆள் குறையுதே என்று பார்தேன் ,,,ப#%%^&*&* தூக்க ???////

வாங்கப்பு...
சேந்து தூக்கலாம்....

:-)

வெளங்காதவன்™ said...

///உங்க பேச்சு தழிழுங்க...நெனைக்க நெனைக்க சிரிப்பயிருக்குங்க....இந்த சிரிப்பாயிருக்குங்கு என்றதை எல்லாத்துக்கும் சேர்த்து எடுக்கலாமுங்க..எல்லாத்துக்கும்....(வெளங்காதவரு போல எழுத முயற்சித்துள்ளேன்)////

வருகைக்கு நன்றி....

இரவில் உங்கள் தளத்தில் உலா வருகிறேன்...
கருத்திற்கும் நன்றி...

வெளங்காதவன்™ said...

///NAAI-NAKKS said...

ப ,,,,பா ,,,,$%^&*^& தூக்க///

பிரிஞ்சுது அப்பு!

ஹி ஹி ஹி...

வெளங்காதவன்™ said...

///Yoga.s.FR said...

இத்தோட ஒழியணும்,சனி!(அக்டோபர் 15 கடைசி புரட்டாதி சனி விரதம்!)////

வாழ்க!

வெளங்காதவன்™ said...

///வெங்கட் said...

// உள்ளாட்சித் தேர்தலிலே தனித்துப் போட்டியிட்டு,
கட்சி வளர்ப்போம் வா! //

கட்சியா., கோஷ்டியா தம்பி..?!!///

க.க.க. போ!

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால உள்ளாட்சித் தேர்தல்லயும் ஆட்சிய புடிக்கனுமா உங்களுக்கு?////வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

//ங்கொய்யால உள்ளாட்சித் தேர்தல்லயும்
ஆட்சிய புடிக்கனுமா உங்களுக்கு?//

ஏன் முடியாதா..?

எங்க தானை தலிவர் தங்கபாலு மட்டும்
மனசு வெச்சா.. அமெரிக்காவுலயே
ஆட்சியை பிடிப்போம்...

காந்தி தாத்தா சொன்னாரேன்னு
" சுதேசி கொள்கைக்காக " பார்க்கறோம்.. ஆமா..///

தங்கபாலு வாழுக, ராகுல் வாழுக...
யுவராசா வாழுக...

ஹி ஹி ஹி....

Yoga.s.FR said...

வெளங்காதவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்கொய்யால உள்ளாட்சித் தேர்தல்லயும் ஆட்சிய புடிக்கனுமா உங்களுக்கு?////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,
//ங்கொய்யால உள்ளாட்சித் தேர்தல்லயும்
ஆட்சிய புடிக்கனுமா உங்களுக்கு?//

ஏன் முடியாதா..?
எங்க தானை தலிவர் தங்கபாலு மட்டும்
மனசு வெச்சா.. அமெரிக்காவுலயே
ஆட்சியை பிடிப்போம்...

காந்தி தாத்தா சொன்னாரேன்னு
"சுதேசி கொள்கைக்காக " பார்க்கறோம்.. ஆமா..///

தங்கபாலு வாழுக, ராகுல் வாழுக...
யுவராசா வாழுக...
ஹி ஹி ஹி....////"அவரை" ஏன் "ஒழி"கன்னு சொல்லாம வுட்டீங்க????ஹி!ஹி!!ஹி!!!

Yoga.s.FR said...

வெளங்காதவன் said...

///Yoga.s.FR said...

இத்தோட ஒழியணும்,சனி!(அக்டோபர் 15 கடைசி புரட்டாதி சனி விரதம்!)////

வாழ்க!////என்னங்க,நான் சனி ஒழியணும்கிறேன்!நீங்க வாழ்க ங்கிறீங்க?டபுள் கேமா????????(double game?)

Yoga.s.FR said...

வெளங்காதவன் said...

///Yoga.s.FR said...

இத்தோட ஒழியணும்,சனி!(அக்டோபர் 15 கடைசி புரட்டாதி சனி விரதம்!)////

வாழ்க!////என்னங்க,நான் சனி ஒழியணும்கிறேன்!நீங்க வாழ்க ங்கிறீங்க?டபுள் கேமா????????(double game?)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதுதான் ரைட்டு...

Unknown said...

மாப்ள அந்த மானங்கெட்ட விஷயம் சொன்னியே அதான்யா டாப்பு ஹிஹி! TM 7!

குடிமகன் said...

சூப்பருங்க!!
நிக்கிறோம்!! தூக்கறோம்!!(கட்சிய)

கோகுல் said...

என்னது தனித்து போட்டியிட்டு கட்சி வளர்போமா?
இந்த வருடத்தின் மிகச்சிறந்த___________

கோடிட்ட இடத்தை நிரப்புங்கள் பாப்போம்?

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலம் தானா..

சொற்களால் ஒரு சாட்டையடியினைச் சோனியாவிற்கு கொடுத்திருக்கிறீங்க.

மக்களின் உணர்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது இக் கடிதம்.

நிரூபன் said...

தல அப்புறமா கோவிச்சுக்க வேணாம்.

உங்கள் வலை எனக்கு அறிமுகமான போது நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்., அதான் ஐயோ...குத்துதே குடையுதே தொடரை இடை நடுவில் இருந்து படிக்க முடியலை.

டைம் கிடைக்கும் போது படித்து என் கருத்துக்களையும் பகிர்கிறேன்.

வைகை said...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்... ஹா...ஹா.. :))

வெளங்காதவன்™ said...

/// தங்கபாலு வாழுக, ராகுல் வாழுக...
யுவராசா வாழுக...
ஹி ஹி ஹி....////"அவரை" ஏன் "ஒழி"கன்னு சொல்லாம வுட்டீங்க????ஹி!ஹி!!ஹி!!//

அவர் எப்பவுமே..............
# ஹி ஹி ஹி

வெளங்காதவன்™ said...

//புரட்டாதி சனி விரதம்!)////

வாழ்க!////என்னங்க,நான் சனி ஒழியணும்கிறேன்!நீங்க வாழ்க ங்கிறீங்க?டபுள் கேமா????????(double game?)///

It's not game..........

வெளங்காதவன்™ said...

// Delete
Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

இதுதான் ரைட்டு...///

வாங்கண்ணே!

வெளங்காதவன்™ said...

//விக்கியுலகம் said...

மாப்ள அந்த மானங்கெட்ட விஷயம் சொன்னியே அதான்யா டாப்பு ஹிஹி! TM 7!////

மாமு... அம்புட்டு கப்பா அடிக்குது?
(மூக்கைப் பொத்திக்கொண்டு படிக்கவும்)

வெளங்காதவன்™ said...

//குடிமகன் said...

சூப்பருங்க!!
நிக்கிறோம்!! தூக்கறோம்!!(கட்சிய)///

ஆமாங்க... அதேதானுங்க!

வெளங்காதவன்™ said...

//கோகுல் said...

என்னது தனித்து போட்டியிட்டு கட்சி வளர்போமா?
இந்த வருடத்தின் மிகச்சிறந்த___________

கோடிட்ட இடத்தை நிரப்புங்கள் பாப்போம்?///
வேணாம்யா! வேணவே வேணாம்!

வெளங்காதவன்™ said...

//நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலம் தானா..

சொற்களால் ஒரு சாட்டையடியினைச் சோனியாவிற்கு கொடுத்திருக்கிறீங்க.

மக்களின் உணர்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது இக் கடிதம்.///

ஹி ஹி ஹி...

#சொகம்யா!

வெளங்காதவன்™ said...

// வணக்கம் நண்பா,
நலம் தானா..

சொற்களால் ஒரு சாட்டையடியினைச் சோனியாவிற்கு கொடுத்திருக்கிறீங்க.

மக்களின் உணர்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது இக் கடிதம்.

September 25, 2011 9:28 PM
Delete
Blogger நிரூபன் said...

தல அப்புறமா கோவிச்சுக்க வேணாம்.

உங்கள் வலை எனக்கு அறிமுகமான போது நான் கொஞ்சம் பிசியாகிட்டேன்., அதான் ஐயோ...குத்துதே குடையுதே தொடரை இடை நடுவில் இருந்து படிக்க முடியலை.

டைம் கிடைக்கும் போது படித்து என் கருத்துக்களையும் பகிர்கிறேன்.///

வாங்கப்பு!

வெளங்காதவன்™ said...

//வைகை said...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்... ஹா...ஹா.. :))////

அண்ணே! மெய்யாலுமே வா?

இம்சைஅரசன் பாபு.. said...

இத்தாலிய நாட்டு மகளே ..இந்தியாவின் மருமகளே .
இந்தியாவை இத்தாலியா வாக்கும் உன் முயற்ச்சி ஜெயிக்கட்டும்

வெளங்காதவன்™ said...

//இம்சைஅரசன் பாபு.. said...

இத்தாலிய நாட்டு மகளே ..இந்தியாவின் மருமகளே .
இந்தியாவை இத்தாலியா வாக்கும் உன் முயற்ச்சி ஜெயிக்கட்டும்
///

வருகைக்கு நன்னி மக்கா!

சி.பி.செந்தில்குமார் said...

வசன உதவி பட்டாபட்டியா?ஹா ஹா

வெளங்காதவன்™ said...

///சி.பி.செந்தில்குமார் said...

வசன உதவி பட்டாபட்டியா?ஹா ஹா
////

ஹி ஹி ஹி...

ஆமாண்ணே!

வெளங்காதவன்™ said...

comment checking

நெல்லி. மூர்த்தி said...

ஆத்தி... இவரைப் போயி வெளங்காதவன்னு சொல்றாக... தொங்கபாலு மட்டுமல்ல எத்தினி பேரு கெ(கி)லிக்கறாங்கன்னு போவபோவ பொறவு தெரியும் பாரு! ங்கொய்யால... கூட்டணிங்கறதுக்கு ஆப்பு வச்சு சுழிபோட்ட கலீஞருக்கு, இதுகோசரமே தமிழகம் நன்றி சொல்லனும்! மாப்பு... இனி யாருக்கெல்லாம் வரப்போகுதோ ஆப்பு..!?

வெளங்காதவன்™ said...

//நெல்லி. மூர்த்தி said...

ஆத்தி... இவரைப் போயி வெளங்காதவன்னு சொல்றாக... தொங்கபாலு மட்டுமல்ல எத்தினி பேரு கெ(கி)லிக்கறாங்கன்னு போவபோவ பொறவு தெரியும் பாரு! ங்கொய்யால... கூட்டணிங்கறதுக்கு ஆப்பு வச்சு சுழிபோட்ட கலீஞருக்கு, இதுகோசரமே தமிழகம் நன்றி சொல்லனும்! மாப்பு... இனி யாருக்கெல்லாம் வரப்போகுதோ ஆப்பு..!?
////

ஹி ஹி ஹி...

வாங்கப்பு.....

கொஞ்சம் பொறுங்க...

பாக்கலாம்...